

பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பொது பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:-
உலகின் சிறந்த 200 கல்வி நிறுவன பட்டியலில் 5 ஆண்டுகளுக்கு முன் இந்தியா இடம்பெறவில்லை. தற்போது 3 இந்திய கல்வி நிறுவனங்கள் முதல் 200 இடங்களுக்கு முன்னேறியுள்ளன.
எதிர்காலத்தில் ஏற்படும் தொழில்நுட்ப பணியாளர் பற்றாக்குறையை எதிர்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விளையாட்டு வீரர்களின் மேம்பாட்டிற்காக தேசிய விளையாட்டு கல்வி வாரியம் அமைக்கப்படும். நாடு முழுவதும் 4 தொழிலாளர் நீதிமன்றங்கள் உருவாக்கப்படும். ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வழிகாட்டுதல் வழங்க புதிய தொலைக்காட்சி சேவை தொடங்கப்படும். இந்த புதிய தொலைக்காட்சியும் ஸ்டார்ட் அப் நிறுவனமாகவே தொடங்கப்படும்.
இவ்வாறு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.