ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நீக்கம் விவகாரம்: பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் உண்ணாவிரதம்

ஈரோடு மாவட்டத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட 33 ஒப்பந்த தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பி.எஸ்.என்.என். ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நீக்கம் விவகாரம்: பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் உண்ணாவிரதம்
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட 33 ஒப்பந்த தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக் கையை வலியுறுத்தி பி.எஸ்.என்.என். ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இன்று ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். முதன்மை பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் மாநிலம் முழுவதிலும் இருந்து வந்த ஊழியர்கள் பங்கேற்ற உண்ணாவிரதம் நடந்தது.

பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாநில செயலாளர் பாபு ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்க மாநில செயலாளர் வினோத்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.

பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாநில துணை செயலாளர் சுப்பிரமணியன், அமைப்பு செயலாளர் மணியன், மாநில செயற்குழு உறுப்பினர் வளர்மதி, மாவட்ட செயலாளர்கள் பரமேஸ்வரன், பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கம், தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்க மாநில நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலர் பங்கேற்றனர். அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com