

இங்கிலாந்து அணி 1990-ம் ஆண்டிற்குப் பிறகு தற்போதுதான் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இங்கிலாந்து அணி கோப்பையை வெல்லும் என்று இங்கிலாந்து மக்கள் நம்புகிறார்கள். இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடைபெறுகிறது. ஒருவேளை இங்கிலாந்து வெற்றி பெற்றால் ரசிகர்கள் இந்த வெற்றியை கொண்டாட பொது வங்கி விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.