கொழும்பு கொட்டாஞ்சேனையில் மீண்டும் குண்டுவெடிப்பு

இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள கொட்டாஞ்சேனை பகுதியில் இன்று மீண்டும் குண்டு வெடித்ததால் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது. #Kotahenablast #SriLankablast
கொழும்பு கொட்டாஞ்சேனையில் மீண்டும் குண்டுவெடிப்பு
Published on

கொழும்பு:

இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள கொட்டாஞ்சேனை, புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு அருகில் ஒரு வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு ஒன்றை கண்டுபிடித்த சிறப்புப்படை போலீசார் அதை பாதுகாப்பாக செயலிழக்கச் செய்ய முற்பட்டனர்.

அப்போது அந்த குண்டு எதிர்பாராதவிதமாக திடீரென்று வெடித்துச் சிதறியது.

நேற்றைய தொடர் குண்டுவெடிப்புகளால் மக்கள் மிகவும் பீதியடைந்துள்ள நிலையில் இன்று மீண்டும் ஒரு குண்டு வெடித்ததால் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். #Kotahenablast #SriLankablast 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com