மும்பை மேயர் தேர்தலில் வேட்பாளரை நிறுத்த மாட்டோம் - பாஜக அறிவிப்பு
பிர்ஹன் மும்பை மாநகராட்சியின் மேயர் பதவிக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெற்று வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜகவும் சிவசேனாவும் தனித்தனியாக போட்டியிட்டன.
இந்த தேர்தலில் வார்டு உறுப்பினர்களுக்கான அதிக இடங்களில் சிவசேனா வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். ஆனால், மேயர் பதவிக்கான நபரை தேர்வு செய்வதற்கான பெரும்பான்மை இல்லாததால் சிவசேனாவின் மேயர் வேட்பாளர் விஸ்வநாத் மஹதேஷ்வர் வெற்றி பெறுவதற்கு பாஜக ஆதரவு அளித்தது.
பாராளுமன்றத்தில் முன்னர் ஆளும்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த சிவசேனா எம்.பி.க்கள் இன்று தொடங்கிய பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி வரிசையில் அமர வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், போதுமான மாநகராட்சி கவுன்சிலர்கள் எங்களிடம் இல்லாததால் மேயர் தேர்தலில் யாரையும் நிறுத்த மாட்டோம் என பாஜக தலைவர் மனோஜ் கோட்டக் தெரிவித்துள்ளார்.

