கொலை வழக்கில் ஆயுள் தண்டனை - உத்தரபிரதேச பா.ஜனதா எம்.எல்.ஏ. கோர்ட்டில் சரண்

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற உத்தரபிரதேச பா.ஜனதா எம்.எல்.ஏ அசோக் சிங் சந்தல் உள்ளூர் கோர்ட்டில் சரணடைந்தார்.
கொலை வழக்கில் ஆயுள் தண்டனை - உத்தரபிரதேச பா.ஜனதா எம்.எல்.ஏ. கோர்ட்டில் சரண்
Published on

ஹமிர்பூர்:

உத்தரபிரதேசத்தின் ஹமிர்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட சதர் சட்டமன்ற தொகுதியில் பா.ஜனதா சார்பில் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அசோக் சிங் சந்தல். இவருக்கும், உள்ளூர் பா.ஜனதா தலைவர் சுக்லா என்பவருக்கும் கடந்த 1997-ம் ஆண்டு ஜனவரி 26-ந் தேதி தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த அசோக் சிங் சந்தல் உள்ளிட்டோர் சுக்லா குடும்பத்தினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் சுக்லாவின் சகோதரர்கள், மருமகன்கள் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டனர். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக அசோக் சிங் சந்தல் உள்ளிட்டோர் மீது உள்ளூர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இந்த வழக்கில் இருந்து அவர்கள் அனைவரும் கடந்த 2002-ம் ஆண்டு விடுவிக்கப்பட்டனர்.இதை எதிர்த்து சுக்லா, அலாகாபாத் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு அசோக் சிங் சந்தல் உள்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. பின்னர் தண்டனைக்காக கோர்ட்டில் சரணடையாமல் இருந்ததால் அவர்களுக்கு எதிராக கைது வாரண்டும் பிறப்பிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து நேற்று அசோக் சிங் சந்தல் உள்ளூர் கோர்ட்டில் சரணடைந்தார். அவருடன் மேலும் 5 பேரும் சரணடைந்தனர். அவர்கள் அனைவரும் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com