பைக்குகள் மோதிய விபத்து - திருமணம் ஆன 4 மாதத்தில் புது மாப்பிள்ளை பலி

வடமதுரை அருகே பைக்குகள் மோதிய விபத்தில் புது மாப்பிள்ளை பலியானார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பைக்குகள் மோதிய விபத்து - திருமணம் ஆன 4 மாதத்தில் புது மாப்பிள்ளை பலி
Published on

வடமதுரை:

வடமதுரை அருகே உள்ள காணப்பாடி புதுப்பட்டியைச் சேர்ந்தவர் சின்னமணி மகன் மணிகண்ட பிரபு (வயது 26). இவர் சம்பவத்தன்று தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது மற்றொரு பைக் மோதியதில் படுகாயமடைந்தார்.

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் சாந்தி என்பவருடன் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது. வடமதுரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்...

வடமதுரை அருகே உள்ள தென்னம்பட்டியைச் சேர்ந்தவர் சிங்காரம் (34). இவருக்கு லலிதா என்ற மனைவியும் வெற்றி (10) என்ற மகனும் உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக சிங்காரம் சம்பவத்தன்று தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்தார். பலத்த காயங்களுடன் திருச்சி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு பரிதாபமாக உயிரிழந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com