அழகுசேனை ஏரிக்கரை அருகே மொபட் மீது கார் மோதல்- வேளாண் உதவி அலுவலர் பலி

அழகுசேனை ஏரிக்கரை அருகே மொபட் மீது கார் மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த வேளாண் உதவி அலுவலர் பரிதாபமாக உயிரிழந்தார்.
முனியப்பன்
முனியப்பன்
Published on

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அருகே உள்ள அழகுசேனை கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 82), ஓய்வு பெற்ற வேளாண்மை உதவி அலுவலர். இவர், நேற்று மொபட்டில் வேலூர்-திருவண்ணாமலை மெயின் ரோட்டில் அழகுசேனை ஏரிக்கரை அருகே செல்லும் போது, அந்த வழியாக சென்ற கார் திடீரென மொபட் மீது மோதியது.

இதில் முனியப்பன் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com