

இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ‘‘நேற்று நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியின்போது புவனேஸ்வர் குமாருக்கு முதுகின் அடிப்பாகத்தில் காயம் ஏற்பட்டது. அவரது காயம் பிசிசிஐ மெடிக்கல் குழுவால் கவனிக்கப்பட்டு வருகின்றது. இந்திய அணியில் அவருடைய பெயர் விரைவில் இடம்பெறும்’’ என்று பிசிசிஐ அறிக்கை வெளியிட்டுள்ளது.