பவானிசாகர் அணை வேகமாக நிரம்புகிறது

கடந்த 10 தினங்களுக்கு முன் 52 அடியாக இருந்த பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 9 மணி நிலவரப்படி 66.75 அடியாக உள்ளது. இன்று மதியம் 67 அடியை எட்டிவிடும்.
பவானிசாகர் அணை
பவானிசாகர் அணை
Published on

சத்தியமங்கலம்:

120அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையில் 15 அடி சேறும், சகதியும் கொண்டது. 105 அடிக்கு தண்ணீரை சேமித்து வைக்கலாம்.

கடந்த ஆண்டு இதே நாளில் தென்மேற்கு பருவமழை பலமாக கொட்டி அணை நிரம்பியது. ஆனால் இந்த ஆண்டு எதிர்பார்த்த மழை இல்லை. எனினும் கடந்த 3 நாட்களாக தற்போது அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலையில் பலத்த மழை கொட்டி வருகிறது.

இந்த மழையாலும் மேலும் நீலகிரியில் உள்ள பில்லூர் அணை நிரம்பி உள்ள நிலையில் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதாலும் பவானி சாகர் அணைக்கு கடந்த சில நாட்களாக அதிகளவில் நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது.

நேற்று இரவு வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இது இன்று காலை 9 மணியளவில் சிறிது குறைந்தது.

எனினும் அணைக்கு வினாடிக்கு 8660 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர் மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.

கடந்த 10 தினங்களுக்கு முன் 52 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை 9 மணி நிலவரப்படி 66.75 அடியாக உள்ளது. இன்று மதியம் 67 அடியை எட்டிவிடும்.

அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரிப்பால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com