பெசன்ட் நகரில் பறக்கும் படை சோதனையில் 75 பட்டு புடவைகள் பறிமுதல்

பெசன்ட் நகரில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் 75 பட்டு புடவைகள் பறிமுதல் செய்யப்பட்டது. #LSPolls
பெசன்ட் நகரில் பறக்கும் படை சோதனையில் 75 பட்டு புடவைகள் பறிமுதல்
Published on

சோழிங்கநல்லூர்:

பெசன்ட் நகர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பெசன்ட் நகர் வேளாங்கண்ணி கோவில் வழியாக வந்த வாகனத்தை ஆய்வு செய்தனர். அதில் 75 பட்டுப்புடவைகள், 95 ஆயிரம் ரொக்கப் பணம் இருந்தது. அதற்கு ஆவணங்கள் இல்லாததால் புடவைகள், பணத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும் அவர்களிடம் விசாரணை நடத்திய போது ஆதரவற்ற முதியோர் இல்லத்திற்கு கொடுக்க சென்றதாக தெரிவித்துள்ளனர். இதற்கு ஆவணங்கள் கொண்டு வந்து மீண்டும் எடுத்துச் செல்லலாம் என தேர்தல் பறக்கும் படையினர் கூறியுள்ளனர். #LSPolls

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com