புரோ கபடி லீக்: மும்பையை வீழ்த்தி 4வது இடத்துக்கு முன்னேறியது பெங்களூரு

புரோ கபடி லீக் தொடரில் ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்திய பெங்களூரு அணி, பட்டியலில் நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
மும்பை வீரரை மடக்கிய பெங்களூரு வீரர்
மும்பை வீரரை மடக்கிய பெங்களூரு வீரர்
Published on

ஜெய்ப்பூர்:

7-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஜெய்ப்பூரில் இன்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ், யு மும்பா அணிகள் மோதின.

ஆரம்பத்தில் இருந்தே பெங்களூரு அணி வீரர்கள் சிறப்பாக ஆடினர். இதனால் முதல் பாதி முடிவில் 17- 11 என்ற புள்ளிக் கணக்கில் பெங்களுரு முன்னிலை வகித்தது.

இரண்டாவது பாதியில் மும்பை அணி வீரர்கள் பொறுப்புடன் ஆடி புள்ளிகளை எடுத்தனர். இறுதியில், பெங்களூரு புல்ஸ் அணியினர் 35- 33 என்ற புள்ளிக் கணக்கில் திரில் வெற்றி தோற்றது.

19-வது ஆட்டத்தில் ஆடிய பெங்களூரு புல்ஸ் அணி பெற்ற 10-வது வெற்றி இதுவாகும். அத்துடன் புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. 18-வது ஆட்டத்தில் ஆடிய யு மும்பா அணி சந்தித்த 8-வது தோல்வி இதுவாகும்.

மற்றொரு ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை 51-31 என்ற கணக்கில் அபாரமாக வீழ்த்திய தெலுகு டைட்டன்ஸ் அணி ஆறுதல் வெற்றி பெற்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com