மேலும் 2 பேர் விண்ணப்பம்: தேர்வுக்குழு பதவிக்கு மனீந்தர், சஞ்சீவ் சர்மாவும் போட்டி

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு பதவிக்கு மனீந்தர், சஞ்சீவ் சர்மா ஆகியோர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
பிசிசிஐ
பிசிசிஐ
Published on

இந்திய கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்யும் தேர்வுக்குழு தலைவரான எம்.எஸ்.கே. பிரசாத்தின் பதவிக்காலம் முடிந்து விட்டது. இதேபோல தேர்வுக்குழு உறுப்பினரான ககன் கோடாவின் பதவியும் முடிந்தது.

புதிய தேர்வுக்குழு தலைவர் மற்றும் உறுப்பினரை தேர்வு செய்வதற்காக கிரிக்கெட் வாரியம் விண்ணப்பங்களை வரவேற்று இருந்தது.

முன்னாள் வீரர்கள் எல். சிவராமகிருஷ்ணன், வெங்கடேஷ் பிரசாத், அஜித் அகர்கர், நயன் மோங்கியா, ராஜேஷ் சவுகான், அமய் குருசியா, பிரிதம் காண்டே உள்ளிட்டோர் தேர்வுக்குழு பொறுப்புகளுக்கு விண்ணப்பித்து இருந்தனர்.

இந்தநிலையில் முன்னாள் சுழற்பந்து வீரர் மனீந்தர் சிங், மிதவேக பந்து வீச்சாளர் சஞ்சீவ் சர்மா ஆகியோரும் தேர்வுக்குழு பதவிக்கு விண்ணப்பித்து இருப்பது தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் டெல்லியை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

54 வயதான மனீந்தர் சிங் 35 டெஸ்ட் உள்பட 145 முதல்தர போட்டியில் விளையாடி உள்ளார். சஞ்சீவ் சர்மா 1990-ம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்து சென்றபோது 2 டெஸ்டில் விளையாடினார். அவர் ஜூனியர் அணி தேர்வாளராகவும் இருக்கிறார்.

புதிய தேர்வுக்குழு தலைவர் மற்றும் ஒரு தேர்வாளரை 3 பேர் கொண்ட கிரிக்கெட் ஆலோ சனை குழு தேர்வு செய்கிறது. இந்த குழுவில் மதன்லால், ஆர்.பி.சிங், சுலச்சனா நாயக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com