பொதுவான இடத்தில் போட்டி என்றால் தயார்: வங்காளதேசம்

பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்த வங்காளதேசம், பொதுவான இடத்தில் டெஸ்ட் போட்டியை நடத்தினால் தயார் என்று தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் வங்காளதேசம் கிரிக்கெட்
பாகிஸ்தான் வங்காளதேசம் கிரிக்கெட்
Published on

இலங்கை அணி 10 வருடத்திற்குப் பிறகு பாகிஸ்தான் சென்று டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதனால் மற்ற அணிகளும் பாகிஸ்தான் வந்து விளையாடும் என அந்நாட்டு கிரிக்கெட் போர்டு நம்பிக்கையுடன் இருந்தது.

இதற்கு காரணம் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெறுவதும் ஒரு காரணம். இந்த சாம்பியன்ஷிப்பின் படி ஒவ்வொரு அணிகளும் தங்களது நாட்டிலும், வெளிநாட்டிலும் விளையாட வேண்டும்.

இதனடிப்படையில் வங்காளதேசம் அணி பாகிஸ்தான் சென்று இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருந்தது. வங்காளதேசம் அணி எப்படியும் பாகிஸ்தான் வரும் என்று நம்பியிருந்தது. ஒரு போட்டியை பகல்-இரவு டெஸ்டாக நடத்த விரும்பிய பாகிஸ்தான், இதற்கு சம்மதிக்கும்படி வங்காளதேசத்திற்கு வேண்டுகோளும் விடுத்தது.

ஆனால், பாதுகாப்பு கருதி டெஸ்ட் தொடரில் விளையாட முடியாது என்று வங்காளதேசம் கூறியுள்ளது. மேலும், டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட தயார். பொதுவான இடத்தில் டெஸ்ட் தொடரை நடத்தினால், விளையாடுகிறோம் என்று வங்காளதேசம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே வங்காளதேசம் விளையாட மறுத்தபால், இந்த விஷயத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு கொண்டு செல்வோம் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com