இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கரை இழுக்கிறது வங்காளதேசம்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த சஞ்சய் பாங்கரை, டெஸ்ட் போட்டிக்கான பேட்டிங் ஆலோசகராக நியமிக்க ஆலோசித்து வருகிறது வங்காளதேசம்.
சஞ்சய் பாங்கர்
சஞ்சய் பாங்கர்
Published on

இந்திய கிரிக்கெட் அணிக்கு பேட்டிங் பயிற்சியாளராக இருந்தவர் சஞ்சய் பாங்கர். உலக கோப்பை தொடரில் இந்தியா தோல்வியடைந்த பின்னர் இவரது பதவிக் காலம் நீடிக்கப்படவில்லை. இந்நிலையில் வங்காளதேசம் டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்டிங் ஆலோசகராக செயல்படு இவரை அணுகியுள்ளது.

இதனால் வங்காளதேசம் அணிக்கு ஆலோசகராக செயல்பட வாய்ப்புள்ளது. இதுகுறித்து வங்காளதேசம் கிரிக்கெட் போர்டின் தலைமை நிர்வாகி நிஜாமுதீன் சவுத்ரி கூறுகையில் ‘‘நாங்கள் சஞ்சய் பாங்கருடன் டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு ஆலோசகராக பணியாற்றுவது குறித்து பேசியுள்ளோம். ஆனால் இன்னும் முடிவாகவில்லை. மேலும் சில பேரிடம் இந்த பதவி குறித்து பேசி வருகிறார்கள்’’ என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com