முஷ்பிகுர் ரஹிம் பாகிஸ்தான் சென்று விளையாட வேண்டும்: பிசிபி தலைவர் வலியுறுத்தல்

ஜிம்பாப்வே அணிக்கெதிராக இரட்டை சதம் அடித்த முஷ்பிகுர் ரஹிம் பாகிஸ்தான் சென்று விளையாட வேண்டும் என வங்காளதேச கிரிக்கெட் தலைவர் நஸ்முல் ஹசன் வலியுறுத்தியுள்ளார்.
பிசிபி தலைவர் நஸ்முல் ஹசன், முஷ்பிகுர் ரஹிம்
பிசிபி தலைவர் நஸ்முல் ஹசன், முஷ்பிகுர் ரஹிம்
Published on

வங்காளதேசம் கிரிக்கெட் அணி சமீபத்தில் பாகிஸ்தான் சென்று விளையாடியது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்  வங்காளதேசம் விளையாட திட்டமிட்டுள்ளது. பாதுகாப்பு காரணத்தால் இரண்டு போட்டிகளையும் பிரித்து பிரித்து வைக்கப்பட்டுள்ளது.

முதல் டெஸ்டில் வங்காளதேசம் படுதோல்வியடைந்தது. இதனைத் தொடர்ந்து ஜிம்பாப்வே வங்காளம் வந்து ஒரு டெஸ்டில் விளையாடியது. இன்றுடன் முடிந்த இந்த போட்டியில் முஷ்பிகுர் ரஹிம் இரட்டை சதம் அடித்தார். இதனால் வங்காளதேசம் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் முஷ்பிகுர் ரஹிம் பாகிஸ்தான் சென்று விளையாட வேண்டும் என்று வங்காளதேசம் கிரிக்கெட் போர்டு தலைவர் நஸ்முல் ஹசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நஸ்முல் ஹசன் கூறுகையில் ‘‘பாகிஸ்தானுக்கான 2-ம் கட்ட சுற்றுப் பயணத்தில் கலந்து கொள்வது குறித்து முஷ்பிகுர் ரஹிம் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. ஆனால், அவர் பாகிஸ்தானுக்கு செல்வார் என்று நம்புகிறேன்.

ஒப்பந்தத்தில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் பாகிஸ்தான் செல்ல வேண்டும். ஒவ்வொருவருக்கும் குடும்பம் முக்கியமானது. ஆனால், நாடு அதைவிட முக்கியமானது’’ என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com