

தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் கேப்டவுனில் நடைபெற்றது. இந்த போட்டியின் 3-வது நாள் ஆட்டத்தின்போது ஆஸ்திரேலியா தொடக்க வீரர் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்திய கண்டுபிடிக்கப்பட்டது.
ஆஸ்திரேலியா வீரர்களின் மோசடியை அம்பலப்படுத்தியதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஃபெனி டி வில்லியர்ஸ். இவர்தான் முன்னதாக ரிவர்ஸ் ஸ்விங் ஆவதற்காக ஆஸ்திரேலியா அணி ஏதாவது செய்யும் என்று இவர் நம்பியுள்ளார். டிவி வர்ணனையாளராக செயல்பட்ட டி வில்லியர்ஸ் கேமராமேன்களை கவனமாக இருக்குமாறு அறிவுறித்தியுள்ளார்.
இதுகுறித்து ஃபெனி டி வில்லியர்ஸ் கூறுகையில் ‘‘புற்கள் நிறைந்து காணப்படும் ஆடுகளத்தில் உடனடியாக பந்து ரிவர்ஸ் ஸ்விங்கிற்கு ஏற்ற வகையில் மாற்றமடைவது சாத்தியமற்றது. இது ஒன்றும் பாகிஸ்தான் பிட்ச் அல்ல. ஒவ்வொரு சென்டிமீட்டருக்கும் வெடிப்பு இருப்பதற்கு. ஆடுகளத்தில் புற்கள் நிறைந்து இருக்கிறது பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கும்போது, ரிவர்ஸ் ஸ்விங்கிற்கு ஏற்ற வகையில் பந்து ஒரு பக்கம் வெயிட்டாகவும், மறுமக்கம் எடை குறைவாகவும் இருக்க ஏதாவது செய்தாக வேண்டும்.
30 ஓவருக்கு முன்பே ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் ரிவர்ஸ் ஸ்விங் செய்தனர். அப்படியென்றால் அவர்கள் ஏதோ செய்திருக்கிறார்கள். கிரிக்கெட் பந்தில் இரும்பு கம்பிகள் அல்லது அது போன்ற பொருட்களை கொண்டு சேதப்படுத்தினால்தான் உடனடியாக ரிவர்ஸ் ஸ்விங் ஆகும்.