ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் - தமிழக அணிக்கு இந்திரஜித் கேப்டன்

ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ள தமிழக அணியின் புதிய கேப்டனாக பாபா இந்திரஜித் நியமிக்கப்பட்டுள்ளார். #RanjiTrophy #BabaIndrajith #RanjiCaptain
ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் - தமிழக அணிக்கு இந்திரஜித் கேப்டன்
Published on

சென்னை:

2018-2019-ம் ஆண்டுக்கான ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடர் நவம்பர் மாதம் 1-ம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நடைபெறுகிறது. இதில் பி பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழக அணி, நவம்பர் 1-ம் தேதி தனது முதல் போட்டியில் மத்திய பிரதேச அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி திண்டுக்கல்லில் நடைபெற உள்ளது. பி பிரிவில் டெல்லி, பஞ்சாப், பெங்கால் ஆகிய அணிகளும் உள்ளன.

இந்நிலையில் 2018-2019-ம் ஆண்டுக்கான தமிழக ரஞ்சி கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக பாபா இந்திரஜித் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் நடந்த சரத் தலைமையிலான சீனியர் தேர்வு குழுவால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

கடந்த  சீசனில் அபினவ் முகுந்த் கேப்டனாக செயல்பட்டால். இந்த சீசனில் அவருக்குப் பதிலாக இந்திரஜித் கேப்டனாக தேர்வாகி உள்ளார். ரஞ்சி டிராபிக்காக தமிழக அணி நாளை அறிவிக்கப்படுகிறது.

உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திரஜித், 42 முதல்  தர போட்டிகளில் 2662 ரன்கள் குவித்துள்ளார். 7 முறை சதம் அடித்துள்ளார். அதிகபட்சமாக ஒரு போட்டியில் 200 ரன்கள் எடுத்துள்ளார். #RanjiTrophy #BabaIndrajith #RanjiCaptain

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com