அயோத்தி வழக்கு 10ம் தேதிக்கு ஒத்திவைப்பு- புதிய அமர்வு குறித்து விசாரணை

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. #AyodhyaCase
அயோத்தி வழக்கு 10ம் தேதிக்கு ஒத்திவைப்பு- புதிய அமர்வு குறித்து விசாரணை
Published on

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், அலகாபாத் உயர்நீதிமன்றம் 2010ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்குகளை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அந்த கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்துவிட்டனர். புதிதாக அமைக்கப்படும் அமர்வு விசாரிக்கும் என்றும் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தனர்.

இன்று ஒரு நிமிடம் மட்டுமே விசாரணை நடைபெற்றது, எந்த வாதமும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com