அயனாவரம் சிறுமி கற்பழிப்பு வழக்கு - அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் நியமனம்

அயனாவரம் சிறுமி கற்பழிப்பு வழக்கில் போலீசார் தரப்பில் ஆஜராக மத்திய அரசின் மூத்த வக்கீலான என்.ரமேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். #ChennaiGirlHarassment #POCSOAct
அயனாவரம் சிறுமி கற்பழிப்பு வழக்கு - அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் நியமனம்
Published on

சென்னை:

சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 7-ம் வகுப்பு படித்து வரும் 11 வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக குடியிருப்பில் லிப்ட் ஆபரேட்டராக வேலை பார்த்த ரவிக்குமார், காவலாளிகள் அபிஷேக், சுகுமாறன் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் போலீசார் தரப்பில் ஆஜராக மத்திய அரசின் மூத்த வக்கீலான என்.ரமேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக டி.ஜி.பி. பரிந்துரையின் பேரில் உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார். மூத்த வக்கீல் என்.ரமேஷ் 21 ஆண்டுகள் வக்கீல் தொழிலில் இருந்து வருகிறார். பல்வேறு சிவில், கிரிமினல் வழக்குகளில் ஆஜராகி உள்ளார்.  #ChennaiGirlHarassment #POCSOAct

X

Maalai Malar
www.maalaimalar.com