ஆவுடையார்கோவிலில் தீ விபத்தில் 3 வீடுகள் எரிந்து நாசம்

ஆவுடையார்கோவிலில் தீ விபத்தில் 3 வீடுகள் எரிந்து நாசமானதால் ரூ. 5 லட்சம் மதிப்பில் பொருட்கள் சேதம் அடைந்தன.
ஆவுடையார்கோவிலில் தீ விபத்தில் 3 வீடுகள் எரிந்து நாசம்
Published on

அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் நெல்லியடி ஊரணிக்கரைச் சேர்ந்தவர்கள் வசந்தி(42), அழகுமலை (55), ராஜாத்தி (60). இவர்கள் 3 பேரின் வீடுகள் அடுத்தடுத்து உள்ளன. நேற்று மதியம் திடீரென வசந்தியின் வீட்டில் முதலில் தீப்பற்றியது. பின்னர் தீ மளமளவென அழகுமலை, ராஜாத்தி வீடுகளுக்கும் பரவியது. 

இது குறித்து தகவல் அறிந்தும் ஆவுடையார் கோவில் தீயணைப்பு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் 3 வீடுகளிலும் இருந்து ரூ. 5 லட்சம் மதிப்பிலான பணம், நகை, சான்றிதழ், பாத்திரங்கள், வீட்டு உபயோக பொருள்கள் எரிந்து நாசமானது. 

இச்சம்பவம் குறித்து ஆவுடையார்கோவில் போலீசார் வழக்குபதிவு செய்து மின்கசிவு காரணமாக தீ பிடித்ததா? அல்லது வேறு காரணமா என விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com