வேலூர் விரிஞ்சிபுரம் அருகே பள்ளி மாணவன் ஆட்டோ சக்கரத்தில் சிக்கி பலி

வேலூர் அடுத்த விரிஞ்சிபுரம் அருகே பள்ளி மாணவன் ஆட்டோ சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத் தியது.
வேலூர் விரிஞ்சிபுரம் அருகே பள்ளி மாணவன் ஆட்டோ சக்கரத்தில் சிக்கி பலி
Published on

வேலூர்:

வேலூர் அடுத்த விரிஞ்சிபுரம் வரதலாம்பள்ளியை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன் இவரது மகன் திலக்ராஜன் (வயது 10). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.

திலக்ராஜன் நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.

ஆட்டோ டிரைவருடன் முன் இருக்கையில் அமர்ந்து இருந்தார். மாந்தோப்பு என்ற இடத்தில் சென்றபோது நிலை தடுமாறி திலக்ராஜன் கீழே விழுந்தார். ஆட்டோவின் பின் சக்கரம் திலக்ராஜன் மீது ஏறி இறங்கியது.

இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு திலக்ராஜன் சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்தார். இதுகுறித்து லத்தேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com