3-வது ஒருநாள் கிரிக்கெட்: ஆஸி.யை வீழ்த்தி 3-0 எனத் தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து

சிட்னியில் நடைபெற்ற 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இங்கிலாந்து 3-0 எனத் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. #AUSvENG #josButtler
ஸ்டீவ் ஸ்மித்-ஐ அவுட்டாக்கிய சந்தோசத்தில் இங்கிலாந்து வீரர்கள்
ஸ்டீவ் ஸ்மித்-ஐ அவுட்டாக்கிய சந்தோசத்தில் இங்கிலாந்து வீரர்கள்
Published on

இந்நிலையில் 3-வது ஒருநாள் போட்டி சிட்னியில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி ஜேசன் ராய், பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அணியின் ஸ்கோர் 38 ரன்னாக இருக்கும்போது ஜேசன் ராய் 19 ரன்கள் எடுத்த நிலையில் பேட் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து அலெக்ஸ் ஹேல்ஸ் களம் இறங்கினார். இவர் ஒரு ரன் எடுத்த நிலையில் ஸ்டாய்னிஸ் பந்தில் வெளியேறினார்.

3-வது விக்கெட்டுக்கு பேர்ஸ்டோவ் உடன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். பேர்ஸ்டோவ் 39 ரன்னிலும், ஜோ ரூட் 27 ரன்னிலும் ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து 22.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்திருந்தது.


சதம் அடித்த சந்தோசத்தில் ஜோஸ் பட்லர்

5-வது விக்கெட்டுக்கு மோர்கன் உடன் விக்கெட் கீப்பர் பட்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அணியின் ஸ்கோர் 35 ஓவரில் 172 ரன்னாக இருக்கும்போது மோர்கன் ஹசில்வுட் பந்தில் வெளியேறினார். அடுத்து வந்த மொயீன் அலி 6 ரன்னில் வெளியேறினார்.

7-வது விக்கெட்டுக்கு பட்லர் உடன் கிறிஸ் வோக்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கடைசி 10 ஓவரில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கடைசி ஓவரில் பட்லர் சதமும், கிறிஸ் வோக்ஸ் அரைசதமும் அடிக்க இங்கிலாந்து 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் குவித்தது.


36 பந்தில் 53 ரன்கள் சேர்த்த கிறிஸ் வோக்ஸ்

இங்கிலாந்து கடைசி 10 ஓவரில் 102 ரன்கள் குவித்தது. 41-வது ஓவரில் 52 பந்தில் அரைசதம் அடித்த பட்லர் அடுத்த 31 பந்தில் சதத்தை தொட்டார். கிறிஸ் வோக்ஸ் 36 பந்தில் 53 ரன்கள் சேர்த்தார். இருவரும் கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தனர்.

பின்னர் 303 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. பிஞ்ச், வார்னர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அணியின் ஸ்கோர் 24 ரன்னாக இருக்கும்போது வார்னர் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேமரூன் ஒயிட் 17 ரன்னில் ஏமாற்றம் அளித்தார்.

3-வது விக்கெட்டுக்கு பிஞ்ச் உடன் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது. ஆரோன் பிஞ்ச் 49 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 53 பந்தில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.


62 ரன்கள் எடுத்த ஆட்டமிழந்த பிஞ்ச்

மறுமுனையில் விளையாடிய ஸ்மித் 45 ரன்னில் வெளியேறினார். ஸ்மித் வெளியேறியபோது ஆஸ்திரேலியா 34 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 96 பந்தில் 122 ரன்கள் தேவைப்பட்டது.

அடுத்து வந்த மிட்செல் மார்ஷ் 55 ரன்னும், ஸ்டாய்னிஸ் 56 ரன்னும் அடித்தனர். என்றாலும் அவர்களால் வெற்றி இலக்கை எட்ட முடியவில்லை. ஆஸ்திரேலியாவால் 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இங்கிலாந்த 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டிம் பெய்ன் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.


56 ரன்கள் எடுத்த ஸ்டாய்னிஸ்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com