பந்து வீச்சில் அசுர பலம் கொண்ட ஆஸ்திரேலியா தொடரை வெல்ல வாய்ப்புள்ளது- ரகானே

ஸ்மித், வார்னர் இல்லாவிடிலும், பந்து வீச்சில் அசுர பலம் கொண்ட ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் தொடரை வெல்ல வாய்ப்புள்ளதாக ரகானே தெரிவித்துள்ளார். #AUSvIND
பந்து வீச்சில் அசுர பலம் கொண்ட ஆஸ்திரேலியா தொடரை வெல்ல வாய்ப்புள்ளது- ரகானே
Published on

இந்நிலையில் ஸ்மித், வார்னர் இல்லாத ஆஸ்திரேலியாவை பலவீனமடைந்த அணி என்று கூறிவிட முடியாது என்று இந்திய அணியின் துணைக்கேப்டன் ரகானே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரகானே கூறுகையில் ‘‘எந்த அணியும் அதன் சொந்த மண்ணில் விளையாடும்போது, அவர்கள் சிறந்த அணியாகத்தான் திகழ்வார்கள் என்று உணர்கிறேன். ஆஸ்திரேலியா இன்னும் தொடரை கைப்பற்ற வாய்ப்புள்ளதாகவே கருதுகிறேன்.

நாங்கள் எப்போதுமே எதிரணியை எளிதாக எடுத்துக் கொண்டு விளையாடுவதில்லை. அவர்கள் ஸ்மித், வார்னர் ஆகியோரை இழந்திருக்கிறார்கள். என்றாலும், ஆஸ்திரேலியா அணி பலவீனமானது என்று நான் கருதவில்லை.

அவர்களுடைய பந்து வீச்சு யூனிட்டை பார்த்தீர்கள் என்றால், மிகவும் அசுர பலம் கொண்டது. இந்திய அணி தொடரை வெல்ல வேண்டும் என்றால், பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொள்ள வேண்டியது அவசியம். ஆகவே, ஆஸ்திரேலியா இன்னும் தொடரை கைப்பற்றுவதற்கு வாய்ப்புள்ள அணியாகவே கருதுகிறேன்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com