சர்வதேச அளவில் தலைசிறந்த அணியாக வேண்டும் என்பதே இலக்கு- ஜஸ்டின் லாங்கர்

உலகின் தலைசிறந்த கிரிக்கெட் அணியாக உருவெடுக்க வேண்டும் என்பதே ஆஸ்திரேலியாவின் இலக்கு என ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.#ENGvAUS
சர்வதேச அளவில் தலைசிறந்த அணியாக வேண்டும் என்பதே இலக்கு- ஜஸ்டின் லாங்கர்
Published on

இந்த செயலால் ஆஸ்திரேலியா கிரிக்கெட்டிற்கு பெரிய அளவில் கலங்கம் ஏற்பட்டுள்ளது. இதில் இருந்து மீள ஆஸ்திரேலியா முயற்சி செய்து வருகிறது.

இந்த சம்பவத்திற்குப் பிறகு முதன்முறையாக ஆஸ்திரேலியா சர்வதேச போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதற்கு தயாராகி வரும் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், சர்வதேச அளவில் தலைசிறந்த அணியாக வேண்டும் என்பதே இலக்கு என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து லாங்கர் கூறுகையில் ‘‘நீங்கள் எவ்வளவு பணம் வாங்குகிறீர்கள் அல்லது எத்தனை போட்டியில் விளையாடுகிறீர்கள் அல்லது எத்தனை ரன்கள் அடிக்கிறீர்கள் என்பது பெரிய விஷயம் அல்லை. நீங்கள் உண்மையாக விளையாடவில்லை எனில், மக்கள் அதை நினைவில் கொள்வார்கள்.

நமக்குள்ள நட்புணர்வு மிகவும் முக்கியமானது. நாம் அதில் உறுதியாக இருக்க வேண்டும். ஆஸ்திரேலியா அணியில் உள்ள எல்லோருக்கும் இது பொருந்தும். மைதானத்திற்கு உள்ளேயும், வெளியேயும் நம்முடைய பழக்க வழக்கம் நன்றாக இருந்தால், ரசிகர்களிடம் இருந்து மரியாதை மற்றும் உண்மைத்தன்மையை பெற முடியும்.

ஆஸ்திரேலியா மக்கள் உண்மையிலேயே ஆஸ்திரேலிய அணியின் மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ளனர். சிறந்த கிரிக்கெட் வீரர்களை விட அது அதிகமானது. நாம் கடந்த காலத்தில் ஏராளமான சாதனைகளை படைத்திருக்கிறோம். அதனால் ஆஸ்திரேலிய வீரர்கள் என்பதற்கான நாம் பெருமைப்பட வேண்டும். நாம் அந்த வழயில் சென்று அதேபோல் செயல்பட வேண்டும். அதில் இருந்து நாம் விலகிவிடக்கூடாது’’ என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com