இமாச்சலில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளன பள்ளிப் பேருந்து - 20 மாணவர்கள் பலி

இமாச்சலப்பிரதேசம் கங்க்ரா மாவட்டத்தில் பள்ளி பேருந்து சாலையோர பள்ளத்தாக்கில் கவிழுந்து விபத்துக்குள்ளானதில் 20 மாணவர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இமாச்சலில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளன பள்ளிப் பேருந்து - 20 மாணவர்கள் பலி
Published on

சிம்லா:

இமாச்சலப்பிரதேசம் கங்க்ரா மாவட்டம் நுர்புர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி பேருந்து இன்று மாலை மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. மலைப்பாங்கான சாலையில் செல்லும் போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் பக்கவாட்டில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

விபத்து குறித்த தகவலறிந்து விரைந்து வந்த தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் விபத்துக்குள்ளான பேருந்தை கயிறு மூலம் மேலே கொண்டு வந்தனர். இந்த விபத்தில் 9 மாணவர்கள் பலியானதாக போலீசார் தெரிவித்திருந்தனர்.

மேலும், காயமடைந்த 25-க்கும் அதிகமான மாணவர்கள் அருகிலுள்ள மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினர்.

காயமடைந்த மாணவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததில் பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளதாக அம்மாநில மந்திரி பின்னர் தெரிவித்தார்.

மாணவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். #TamilNews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com