ஆப்கானிஸ்தான் மசூதி மீது பயங்கரவாதிகள் தாக்குதல்- 20 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள மசூதி மீது பயங்கரவாதிகள் இன்று ஜும்மா தொழுகையின்போது நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் - 20 பேர் உயிரிழந்தனர். #AfghanistanSuicideAttack
ஆப்கானிஸ்தான் மசூதி மீது பயங்கரவாதிகள் தாக்குதல்- 20 பேர் உயிரிழப்பு
Published on

ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள பக்கிட்டா மாகாணத்துக்கு உட்பட்ட கார்டெஸ் நகரில் உள்ள ஷியா மசூதி ஒன்றில் இன்று ஜும்மா (வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு) தொழுகை நடைபெற்று கொண்டிருந்தது.

அப்போது உடலில் வெடிகுண்டுகளை கட்டிவந்த ஒரு பயங்கரவாதி அவற்றை வெடிக்க வைத்ததில் 20-க்கும் அதிகமானவர்கள் உடல் சிதறி உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் 50 படுகாயங்களுடன் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com