அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் ஆவணங்கள் தாக்கல்

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணை ஆவணங்களை அரசு தாக்கல் செய்துள்ளது.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
Published on

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தனது பதவியை பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மதுரையைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணையின்போது, லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், அமைச்சர் மீதான புகாரில் முகாந்திரம் இல்லை என்பதால் விசாரணை கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com