சட்டசபையில் ராமசாமி படையாச்சியார் படம் 19-ந்தேதி திறக்கப்படும் - சபாநாயகர்

சட்டசபையில் ராமசாமி படையாச்சியார் படம் 19-ந்தேதி திறக்கப்படும் என்று சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.
சபாநாயகர் தனபால்
சபாநாயகர் தனபால்
Published on

சென்னை:

சட்டசபையில் இன்று சபாநாயகர் தனபால் கூறும் போது, மறைந்த முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். ராமசாமி படையாச்சியார் திருவுருவ படம் சட்டப்பேரவை மண்டபத்தில் வருகிற 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு திறந்து வைக்கப்படும் என்றார்.

சபாநாயகர் தலைமையில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ராமசாமி படையாச்சியாரின் திருவுருவ படத்தை திறந்து வைக்க இருப்பதாகவும் அறிவித்தார்.

விழாவுக்கான அழைப்பிதழ்கள் உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும், அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர், காங்கிரஸ் சட்டமன்ற தலைவர், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய அழைப்பாளர்களும் இதில் கலந்து கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com