

15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான ஆசிய பேட்மிண்டன் போட்டி மியான்மர் நாட்டில் நடந்தது. இதில் பங்கேற்ற சென்னை வீரர் சங்கர் முத்துசாமி வெண்கலப்பதக்கம் பெற்றார். இதன்மூலம் ஆசிய பேட்மிண்டன் போட்டியில் பதக்கம் வென்ற முதல் தமிழக வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
சங்கர் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் நேபாள வீரரையும், கால்இறுதியில் மலேசிய வீரரையும் தோற்கடித்தார். அரை இறுதியில் கொரியா வீரரிடம் போராடி தோற்றார்.
அவர் முகப்பேரில் உள்ள பயர்பால் அகாடமியில் பயிற்சியாளர் அரவிந்தனிடம் பயிற்சி பெற்று வருகிறார். #AsianJuniorBadminton