ஆசிய தடகள போட்டி: புவனேஸ்வரில் அடுத்த மாதம் நடக்கிறது

22-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி அடுத்த மாதம் (ஜூலை) 6-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் நடக்கிறது.
ஆசிய தடகள போட்டி: புவனேஸ்வரில் அடுத்த மாதம் நடக்கிறது
Published on

புதுடெல்லி :

22-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி அடுத்த மாதம் (ஜூலை) 6-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் நடக்கிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 1,000 வீரர்-வீராங்கனைகள் இந்த போட்டியில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லண்டனில் அடுத்த ஆண்டு நடைபெறும் உலக தடகள போட்டிக்கு இந்த ஆசிய போட்டி தகுதி சுற்றாகும். ஆசிய தடகள போட்டி இந்தியாவில் நடக்க இருப்பது இது 3-வது முறையாகும். ஏற்கனவே 1989-ம் ஆண்டில் டெல்லியிலும், 2013-ம் ஆண்டில் புனேயிலும் இந்த போட்டி அரங்கேறி இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com