ஆப்கானிஸ்தானுக்கு எதிராக முஷ்டாபிஜூர் ரஹ்மான் மாயாஜாலம் நிகழ்த்தினார்- கேப்டன் புகழாரம்

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கடைசி ஓவரை அபாரமாக வீசய முஷ்டாபிஜூர் ரஹ்மானுக்கு கேப்டன் மோர்தசா பாராட்டு தெரிவித்துள்ளார். #AsiaCup2018
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக முஷ்டாபிஜூர் ரஹ்மான் மாயாஜாலம் நிகழ்த்தினார்- கேப்டன் புகழாரம்
Published on

ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 8 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அந்த ஓவரை முஷ்டாபிஜூர் ரஹ்மான வீசினார். போட்டியில் மிகவும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் கடைசி ஓவரை நேர்த்தியாக வீசிய முஷ்டாபிஜூர் ரஹ்மான் நான்கு ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

முஷ்டாபிஜூர் ரஹ்மானின் அபார பந்து வீச்சால் 3 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்காள தேசம், பாகிஸ்தானை எதிர்த்து விளையாட இருக்கிறது. அந்த போட்டியில் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிடும்.

கடைசி ஓவரை அபாரமாக வீசிய முஷ்டாபிஜூர் ரஹ்மானை கேப்டன் மோர்தசா வெகுவாக பாராட்டியுள்ளார். முஷ்டாபிஜூர் ரஹ்மான் பந்து வீச்சு குறித்து மோர்தசா கூறுகையில் ‘‘போட்டியின் முடிவில் முஷ்டாபிஜூர் ரஹ்மான் மாயாஜாலம் காட்டியவர் போன்று காட்சியளித்தார். கடைசி ஓவரில் 8 ரன்னுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்பது மிகவும் கடினமானது. அனைத்து புகழும் முஷ்டாபிஜூர் ரஹ்மானையே சாரும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com