ஆஷஸ் படுதோல்வியால் அணியில் பெரிய மாற்றம் தேவையில்லை: ஆண்டர்சன்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான அஷஸ் படுதோல்வியால் இங்கிலாந்து அணியில் பெரிய மாற்றம் செய்ய வேண்டியதில்லை என ஆண்டர்சன் கூறியுள்ளார். #ashes #ausveng
ஆஷஸ் படுதோல்வியால் அணியில் பெரிய மாற்றம் தேவையில்லை: ஆண்டர்சன்
Published on

இந்த தொடரில் இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் 20 விக்கெட்டுக்களை வீழ்த்த முடியாமல் திணறினார்கள். அனுபவம் வாய்ந்த ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், மொயீன் அலி ஆகியோர் பந்து வீச்சு பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

மோசமான தோல்வியால் இங்கிலாந்து பந்து வீச்சு யுனிட் மீது விமர்சனம் எழும்பி வருகிறது. இந்நிலையில் ஒட்டுமொத்தமாக அணியில் மாற்றம் செய்ய வேண்டிய தேவையில்லை என ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியுள்ளார்.

இதுகுறித்து ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறுகையில் ‘‘நாங்கள் கடந்த 18 மாதங்களாக முன்னேற்றம் அடைந்துள்ளோம். நாங்கள் சரியான திசையில் முன்னேறியுள்ளோம். ஒரு தொடரில் இதுபோன்ற மோசமான செயல்பாட்டால் குறை சொல்வதை விரும்பவில்லை. நாங்கள் சிறந்த ஆட்டத்தையே வெளிப்படுத்தினோம். ஐந்து போட்டிகளிலும் நாங்கள் மோசமான தோல்வியை சந்திக்கவில்லை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com