ஆஷஸ் தொடரின் 2-வது ஆட்டம் டிரா

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.
ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் தடுப்பாட்டத்தில் ஈடுப்பட்ட காட்சி
ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் தடுப்பாட்டத்தில் ஈடுப்பட்ட காட்சி
Published on

ஆஷஸ் தொடரின் 2-வது ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 258 ரன்களும், ஆஸ்திரேலியா 250 ரன்களும் சேர்த்தன.

பென் ஸ்டோக்ஸ் 16 ரன்களுடன், ஜாஸ் பட்லர் 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். நேற்று ஐந்தாவது நாள் ஆட்டம் தொடங்கியது. பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். இங்கிலாந்து 71 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்திருந்தபோது 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. பென் ஸ்டோக்ஸ் 115 ரன்னுடனும், பேர்ஸ்டோவ் 30 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஒட்டுமொத்தமாக இங்கிலாந்து 266 ரன்கள் முன்னிலைப் பெற்றதால் ஆஸ்திரேலியாவுக்கு 267 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஆஷஸ் தொடரின் 2-வது ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக மார்னஸ் லாபுசாக்னே 59 ரன்களும் ஹெட் 42 ரன்களும் எடுத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com