ஐகோர்ட்டுகளுக்கு விரைவில் 44 நீதிபதிகள் நியமனம்: தமிழ்நாட்டில் 6 இடங்கள் நிரப்பப்படுகிறது

நாட்டில் உள்ள பல ஐகோர்ட்டுகளில் காலியாக இருந்த இடங்களை நிரப்ப 44 நீதிபதிகள் விரைவில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
ஐகோர்ட்டுகளுக்கு விரைவில் 44 நீதிபதிகள் நியமனம்: தமிழ்நாட்டில் 6 இடங்கள் நிரப்பப்படுகிறது
Published on

புதுடெல்லி:

நாட்டில் உள்ள பல ஐகோர்ட்டுகளில் நீதிபதிகள் பணியிடம் காலியாக இருக்கிறது. ஐகோர்ட்டு நீதிபதிகளை தலைமை நீதிபதி தலைமையிலான 5 மூத்த நீதிபதிகள் கொண்ட கொலேஜியம் என்ற குழு தேர்வு செய்கிறது.

கடந்த வாரம் மும்பை மற்றும் ஜம்மு-காஷ்மீரில் காலியாக இருந்த இடங்களை நிரப்ப 17 நீதிபதிகள் தேர்வு செய்யப்பட்டனர். மற்ற ஐகோர்ட்டுகளுக்கு 44 நீதிபதிகள் விரைவில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அலகாபாத் ஐகோர்ட்டுக்கு 29 பேரும், தமிழ்நாட்டுக்கு 6 பேரும், கல்கத்தா கோர்ட்டுக்கு 7 பேரும், கர்நாடகா கோர்ட்டுக்கு 2 பேரும் தேர்வாகிறார்கள். இது சம்மந்தமாக ஏற்கனவே கடந்த 10-ந்தேதி கொலேஜியம் கூடி ஆய்வு செய்துள்ளது.

ஏற்கனவே கொலேஜியம் தேர்வு செய்த நீதிபதிகள் ஏற்றுக்கொள்வதில் மத்திய அரசு தயக்கம் காட்டியது. ஆனாலும் கடந்த வாரம் 17 நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர். அதேபோல மற்ற நீதிபதிகளும் நியமிக்கப்பட இருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com