மாணவனுக்கு பாலியல் தொந்தரவு- பள்ளி ஆசிரியர் கைது

மாணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த உவரி பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
மாணவனுக்கு பாலியல் தொந்தரவு- பள்ளி ஆசிரியர் கைது
Published on

திசையன்விளை:

உவரியை சேர்ந்தவர் அர்ஜுனன் மகன் வினோத் (வயது 21). இவர் ஒரு பள்ளிக்கூடத்தில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் அதே பள்ளியில் படித்து வந்த 10-ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி உவரி போலீசில் அந்த மாணவன் புகார் செய்தான். போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com