புதுக்கோட்டையில் அரசு பொருட்காட்சிக்கான ஏற்பாடுகள் தீவிரம் - அமைச்சர் ஆய்வு

புதுக்கோட்டையில் அரசு பொருட்காட்சி நடைபெறவுள்ள தற்காலிக பேருந்து நிலைய மைதானத்தில் நடைபெற்று வரும் பணிகளை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
புதுக்கோட்டையில் அரசு பொருட்காட்சிக்கான ஏற்பாடுகள் தீவிரம் - அமைச்சர் ஆய்வு
Published on

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை தற்காலிக பேருந்து நிலைய மைதானத்தில் வருகிற 10ந்தேதி அன்று செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் பல்வேறு பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய அரசுப் பொருட்காட்சி 45 நாட்கள் நடைபெறவுள்ளது.

இந்த அரசு பொருட்காட்சியில் பொது மக்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசின் சாதனைகள் தொடர்பாக பல்வேறு அரசுத்துறைகளின் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்படுவதுடன், அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய மாபெரும் பொருட்காட்சி நடைபெறவுள்ளது.

இந்தநிலையில் பொருட்காட்சி நடைபெறவுள்ள தற்காலிக பேருந்து நிலைய மைதானத்தில் நடைபெற்று வரும் மேற்கூரை அமைத்தல், அரங்குகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் மேற்கொள்ள வேண்டிய பணிகள், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்த தகவல்களை கேட்டறிந்ததுடன், அனைத்து பணிகளையும் குறிப்பிட்ட கால அளவிற்குள் முடித்து அரசுப் பொருட்காட்சி சிறப்பாக நடைபெற சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின் போது தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தலைவர் பி.கே.வைரமுத்து, கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம், மத்திய தொலை தொடர்பு ஆலோசனை குழு உறுப்பினர் பாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com