

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் தேசிய எல்லையில் நுழைய முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகளின் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்தது.
பூஞ்ச் மாவட்ட எல்லையில் இந்திய வீரர்கள் சோதனையில் ஈடுபட்ட போது சுமார் 3.30 மணியளவில் சந்தேகத்திற்கிடமான மர்ம நபர்களின் நடமாட்டம் இருந்தது தெரியவந்ததாக பாதுகாப்பு துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இந்திய பாதுகாப்புப் படை சார்பில் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்திய வீரர்களின் தாக்குதலுக்கு தீவிரவாதிகளும் பதில் தாக்குதல் நடத்தி, பின்னர் அங்கிருந்து பின்வாங்கி தப்பித்து சென்றனர்.