அரியலூர் அருகே ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற 52 வீரர்கள் படுகாயம்

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள விளாகம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. அப்போது காளைகள் முட்டியதில் 52 பேர் காயமடைந்தனர்.
அரியலூர் அருகே ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற 52 வீரர்கள் படுகாயம்
Published on

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள விளாகம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. ஊரின் நடுவீதியில் அமைக்கப்பட்டிருந்த வாடிவாசல் வழியாக முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது.தொடர்ந்து திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர்,  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து அலங்கரித்துக் கொண்டு வரப்பட்ட 450 காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. காளைகளை அடக்க 200 மாடுபிடி வீரர்கள் களத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

அப்போது, காளைகள் முட்டியதில் 52 பேர் காயமடைந்தனர். அதில் படுகாயமடைந்த கல்லக்குடி பிரேம்குமார்(23), ஊவனூர் இளம்பருதி(30), கோவண்டாகுறிச்சி  மார்ட்டின்(32), கோவில் எசனை சிலம்பரசன்(28) மேலும், ஜல்லிக்கட்டு பார்த்துகொண்டிருந்த போது கீழே விழுந்து காயமடைந்த  இலந்தைகூடம் பொன்னுசாமி(65) ஆகிய 5 பேரும் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளையின் உரிமையாளர்களுக்கும் வெள்ளி நாணயங்கள், சில்வர் பாத்திரங்கள்,  உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com