மது குடித்ததை தாய் கண்டித்ததால் வாலிபர் தற்கொலை

அரிமளம் அருகே மது குடித்ததை தாய் கண்டித்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

அரிமளம்:

அரிமளம் ஒன்றியம் கல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகாந்த்(வயது 29). இவருக்கு மஞ்சள் காமாலை நோய் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்தார். இதனை அவருடைய தாய் அன்னபூரணி கண்டித்து, மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்து சாப்பிடும்போது, ஏன் குடித்துவிட்டு வந்தாய் என்று கேட்டு, திட்டி உள்ளார் இதையடுத்து வீட்டில் யாரும் இல்லாதபோது விஜயகாந்த், சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து கே.புதுப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com