அரிமளம் அருகே கார் மோதி ஆசிரியை பலி

அரிமளம் அருகே மொபட் மீது கார் மோதிய விபத்தில் பள்ளி ஆசிரியை பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

அரிமளம்:

அரிமளம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தையல் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ராஜேஸ்வரி(வயது 54). இவர், அரிமளத்தில் இருந்து மொபட்டில் பேரையூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். 

வடக்குநல்லிபட்டி அருகே சென்றபோது எதிரே வந்த கார் மொபட் மீது மோதியது. இதில், படுகாயம் அடைந்த ராஜேஸ்வரியை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ராஜேஸ்வரி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து அரிமளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com