அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் திடீர் விரிசல்- சென்னை ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்

அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டதால் சென்னை செல்லும் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டது.
தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்த காட்சி.
தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்த காட்சி.
Published on

அரக்கோணம்:

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த மகேந்திரவாடி ரெயில் நிலையம் அருகே ரெயில்வே ஊழியர்கள் இன்று காலை 6. 5 5 மணிக்கு தண்டவாள பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது தண்டவாளத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டதை கண்டனர் .

இதுகுறித்து உடனடியாக ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சோளிங்கபுரம் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில்வே ஊழியர்கள் விரைந்து சென்று தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அந்த நேரத்தில் சென்னை நோக்கி வந்த திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ், லால்பாக் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.

தண்டவாளம் ஒரு மணி நேரத்துக்கு பிறகு சீரமைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை செல்லும் ரெயில்கள் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றன. இதனால் இன்று காலையில் சென்னைக்கு பணிக்கு சென்ற ஊழியர்கள், காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிக்கு சென்ற மாணவ-மாணவிகள் பாதிக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com