அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டிக்கு மாரடைப்பு - மருத்துவமனையில் அனுமதி

அப்பல்லோ மருத்துவக் குழுமங்களின் தலைவர் பிரதாப் ரெட்டிக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து அவர் சென்னை அப்பல்லோ மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டிக்கு மாரடைப்பு - மருத்துவமனையில் அனுமதி
Published on

சென்னை:

அப்பல்லோ மருத்துவக் குழுமங்களின் தலைவர் பிரதாப் சி.ரெட்டிக்கு நேற்று நள்ளிரவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மயங்கி விழுந்த அவருக்கு இருதய அடைப்புக்கான ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு, முக்கிய பிரமுகர்களுக்கான வார்டு அறையில் அவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com