

மக்களவை தேர்தலுடன் நடைப்பெற்ற ஆந்திர மாநிலத்தின் சட்டசபை தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 150க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி அமோக வெற்றிப் பெற்றது.
இதேபோல் மக்களவை தேர்தலிலும் மொத்தமுள்ள 25 இடங்களில் 22 இடங்களில் வெற்றிப் பெற்று வாகை சூடியது. இதன் மூலம் பாராளுமன்றத்தில் நான்காவது மிகப்பெரிய பலம் வாய்ந்த கட்சியாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி உயர்ந்தது.
முதல்வராக பொறுப்பேற்றது முதலே ஜெகன் மோகன் ரெட்டி பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். சமீபத்தில், ஆந்திராவைச் சார்ந்த 4.01 லட்சம் இளைஞர்களுக்கு புதியதாக அரசு வேலை உறுதி எனவும், காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2 முதல் பணி வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.
இதனை எதிர்த்து சந்திரபாபு நாயுடு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில், ஜெகன் மோகன் ரெட்டியின் வீட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கென ரூ.24 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை ஆந்திர அரசு ஒதுக்கியுள்ளது. இதற்கான அறிவிப்பாணையை ஆந்திர அரசு நேற்று வெளியிட்டது.