

ராயபுரம்:
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் இன்று கோட்டையை முற்றுகையிட போவதாக அறிவித்திருந்தனர்.
இதற்காக மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், கம்யூனிஸ்டு தொழிற்சங்க மாநில செயலாளர் சவுந்தரராஜன் ஆகியோர் தலைமையில் 500-க்கும் அதிகமானோர் இன்று பாரிமுனையில் கூடினார்கள்.
அங்கிருந்து கோட்டையை முற்றுகையிடுவதற்காக புறப்பட்டனர். அவர்கள் அனைவரையும் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.