அந்தியூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பலி

அந்தியூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரணம்
மரணம்
Published on

அந்தியூர்:

சத்தியமங்கலம் கொளத்தூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மனைவி புஷ்பலதா (வயது 38). சத்தியமங்கலத்தில் இருந்து அந்தியூர் அருகே உள்ள குருவரெட்டியூருக்கு மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்தியூர் பெரிய ஏரி அருகே வந்தபோது திடீரென்று மயில் ஒன்று பறந்து வந்தது. இதில் எதிர்பாராதவிதமாக அவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தனர். இதில் புஷ்பலதா படுகாயம் அடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி புஷ்பலதா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com