

அன்னவாசல்:
இலுப்பூர் அருகே இருந்திராப்பட்டியில் பெட்டிக்கடையில்புகையிலை பொருட்கள் விற்ற காமராஜ் (வயது 40) மீது இலுப்பூர் போலீசாரும்,
சித்தன்னவாசல் சாலையில் உள்ள ஒரு கடையில் புகையிலை விற்ற சதீஸ்குமார் (28) மீது அன்னவாசல் போலீசாரும் வழக்குப்பதிவு செய்தனர்.
செம்பாட்டூர் பகுதியில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற குமார் (49), சின்னராசு (40) ஆகியோர் மீது வெள்ளனூர் போலீசார்
வழக்குப்பதிவு செய்தனர்.
வடகாடு அருகே கே.ராசியமங்கலம் பகுதியில் உள்ள பெட்டிக்கடையில்புகையிலை பொருட்கள் விற்ற அருள்பிரகாசம் (59) மீது வடகாடு போலீசார்
வழக்கு பதிவு செய்தனர்.
கீரமங்கலம் அருகே உள்ள கொத்தமங்கலம் மற்றும் மேற்பனைக்காடு பகுதியில் மதுப்பாட்டில்களை பதுக்கி விற்ற 2 பேர்மீதும், பாண்டக்குடி கிராமத்தில் புகையிலை பொருட்கள் விற்ற ஒருவர் மீதும் கீரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.