ஆண்டிப்பட்டி அருகே மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

ஆண்டிப்பட்டி அருகே மணல் கடத்த பயன்படுத்திய டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆண்டிப்பட்டி அருகே மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்
Published on

ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டி மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தபோதும் குடிநீர் தட்டுப்பாடு தொடர்ந்து கொண்டே வருகிறது. இதற்கு மணல் கடத்தலே காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். வைகைஆறு மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள நீர்நிலைகளில் அதிகளவு மணல் கொள்ளை நடந்து வருகிறது.

போலீசார் அவர்களை பிடித்து நடவடிக்கை எடுத்த போதும் மணல் திருட்டை தடுக்கமுடியவில்லை.

ராஜதானி சப்-இன்ஸ்பெக்டர் ராமபாண்டி தலைமையிலான போலீசார் கணேசபுரம் ஓடைப் பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது வேகமாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் மணல் கடத்தியது தெரியவந்தது. இதனைதொடர்ந்து டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக செல்லப்பாண்டி என்பவர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com