சர்வதேச விமான நிலையத்தில் பிட்காயின் ஏடிஎம்

நெதர்லாந்து நாட்டின் சர்வதேச விமான நிலையத்தில் பிட்காயின் ஏடிஎம் நிறுவப்பட்டுள்ளது. இதை கொண்டு யூரோக்களை க்ரிப்டோகரென்சிகளாக மாற்ற முடியும்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் பிட்காயின் ஏடிஎம் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி, யூரோக்களை க்ரிப்டோகரென்சிக்களாக மாற்றிக் கொள்ள முடியும். ஸ்கிபோல் விமான நிலையம் வரும் பயணிகள் இனி தங்களது ரொக்கத்தை பிட்காயின் மற்றும் எத்திரியம்களாக மாற்ற முடியும்.

சோதனை அடிப்படையில் ஆறு மாத காலத்திற்கு நிறுவப்பட்டிருக்கும், இந்த ஏடிஎம் பயணாளிகளின் வரவேற்புக்கு ஏற்ற வகையில் நீ்ட்டிப்பது குறித்த முடிவு எடுக்கப்பட இருக்கிறது. ஐரோப்பியாவில் இது போன்ற ஏடிஎம் பெறும் முதல் விமான நிலையம் இது என ஸ்கிபோல் தெரிவித்திருக்கிறது. 

ஸ்கிபோல் விமான நிலையத்தின் வாடிக்கையாளர் சேவை பிரிவு தலைவர் தன்ஜா டிக் கூறும் போது, “பயணாளிகளுக்கு தலைசிறந்த சேவையை வழங்க ஸ்கிபோல் தொடர்ந்து புதுவித மற்றும் வித்தியாச வழிமுறைகளை வழங்க முயற்சிக்கிறது என தெரிவித்தார். 

“பிட்காயின் ஏடிஎம் மூலம் பயணர்கள் தங்களின் யூரோக்களை சர்வதேச க்ரிப்டோகரென்சிக்களாக மாற்றிக் கொள்ள முடியும். இது பலருக்கும் பயன்தரும் வகையில் இருக்கும்.” என அவர் மேலும் தெரிவித்தார். 

புதிய ஏடிஎம் இயந்திரம் பேலெக்ஸ் டேட்டா சொல்யூஷன்ஸ் பிவி (ByeleX Data Solutions BV) எனும் தட்சு நிறுவனத்துடன் இணைந்து நிறுவப்பட்டிருக்கிறது. இந்நிறுவனம் வியாபாரங்களுக்கு தேவையான க்ரிப்டோகரென்சி சேவைகளை வழங்கி வருகிறது.

உலகில் முதல் முறையாக க்ரிப்டோகரென்சி பரிமாற்றங்களை மேற்கொள்ளும் வசதியை ஆஸ்திரேலிய விமான நிலையம் அறிமுகம் செய்தது. மே மாத வாக்கில் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் விமான நிலையத்தில் முதல் முறையாக க்ரிப்டோகரென்சி ஏடிஎம் இயந்திரம் நிறுவப்பட்டது. 

பல்வேறு வியாபார நிறுவனங்களும் விர்ச்சுவல் கரென்சிக்களை பரிமாற்றங்களுக்கு பயன்படுத்த துவங்கிவிட்ட நிலையில், க்ரிப்டோகரென்சிக்களை கொண்டே உலகை சுற்றி வருவது மிகவும் எளிமையாகிவிட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com