ஜெயங்கொண்டம் அருகே அம்மன் சிலை கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

ஜெயங்கொண்டம் அருகே அம்மன் சிலையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
Published on

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகில் உள்ள மேலணிக்குழி கிராமத்தில் செல்லியம்மன் கோவிலில் உள்ளது.இதில் அதே கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் (62) என்பவர் பூசாரியாக இருந்து பூஜை செய்து வருகின்றார். இவர் தினந்தோறும் 5 மணி முதல் 7 மணி வரை கோவிலை திறந்து வைப்பது வழக்கம். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். தற்போது இந்த கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன.

நேற்று காலை வழக்கம் போல் பூசாரி ராமலிங்கம் பூஜை செய்ய வந்துள்ளார். அப்போது அந்த கோவிலின் முன்பக்க இரும்புகேட் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக கோவிலின் தர்மகர்த்தா சாமியப்பன் (60) என்பவருக்கு தகவல் கொடுத்தார். அவர் மீன்சுருட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் டிஎஸ்பி கென்னடி மீன்சுருட்டி இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் மற்றும் போலீசார் மேலணிக்குழி சம்பவ இடத்திற்க்கு வந்து விசாரணை நடத்தியதில் கோவிலில் கர்ப்பகிரகத்தில் இருந்த அம்மன் சிலை திருட்டு போய் இருப்பதும், திருடுபோன ஒன்றரை அடி உயரமுள்ள சுமார் 25 கிலோ எடை கொண்ட அம்மன் சிலை வெண்கலமா, ஐம்பொன்னா என்றும், திருடி சென்ற மர்ம நபர்களையும் மீன்சுருட்டி போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com